என் நண்பன் நீயடா! என் ❤த்தில் நீயடா
உன்னோடு பழகிய நாட்களை பகிர்கிறேன் தனிமையோடு நினைவுகள் என்ற பெயரில்...!
பார்த்தாலே பரவசம் தருவாயடா!
தட்டி கொடுத்து கட்டிப் பிடித்த முதல் காலம் நீயடா!
என்னையும் மாலுமி ஆக்கிய பெருமை உன்னைத்தானடா சேரும்...!
கைகோர்த்து முகத்தில் புன்னகை வீசி பள்ளி நாட்களில் ஒட்டிப் பிறந்த ரெட்டை குழந்தைகளைப் போல வளம் வந்தோமடா..!
புள்ளி மானைப்போல துள்ளி விளையாடிய பள்ளி நாட்கள் நாம் வாழ்கையை வாழ்ந்த நாட்களடா!
நாம் பொறாமைப் படாமல் பிறரை பொறாமைப்பட வைத்தொமடா நம் நட்பை பார்த்து...!
மழைக்காலத்தில் நீ தந்த சாக்கு'பை குடையில் நான் நனைந்து சென்றேனடா உன் நட்பெனும் மழையில்!
நீ பாதி கடித்துத்தந்த கடலை மிட்டாய் இன்னும் என் நெஞ்சில் நிறைந்து இனிப்பான நினைவுகளாக இனித்துக்கொண்டே இருக்குதடா!
மதம் மொழி இனம் நிறம் - வேறுபாடில்லா நட்பை நீ சொல்லித் தந்தாயடா!
மொட்டுகளாய் இருந்தபொழுதே மொத்தமும் தந்தாயடா பாசத்தை முழுதும் சுவாசமாக...!
கள்ளமில்லா உள்ளம் ஒன்று உண்டென்றால் அது உன் உள்ளம் மட்டும்தானடா!
எதிர் பாராமல் உதவி செய்த உன் இன்பமுகத்தை என் அகக்கண்கள் இன்னும் மறக்கவில்லையடா!
தங்கத்தட்டில் உண்டாலும் தகரத்தட்டில் உன்னோடு உண்டதே உணவாக இருந்ததடா!
பகிர்ந்துன்னுதலை பார்த்ததே உன்னிடம்தான்...கற்றதும் உன்னிடம்தான்!
தூக்கிவிட்ட நாட்களை விட நீ என்னை உயர்த்தி விட்ட நாட்களே அதிகமடா!
நீயிருந்த நேரமெல்லாம் நான் இறக்கவே நேரிட்டது உன் நட்பில்...!
உலகம் மறந்து உவகையில் நானிருந்த நாட்கள்...உன்னோடுதானடா!
உன்னோடு சிரித்த நாட்கள்...உள்ளத்தோடு நீ சேர்த்த நினைவுகள்!
நீ உடைத்துத்தந்த பல்பத்தில் நான் அன்றே எழுதினேனடா நீ தான் என் நண்பன் என்று!
என்னுயிரில் உன் நினைவுகளை சேர்த்தே உயிரோடு வாழ்கிறேனடா!
என் நண்பன் நீயடா!
- செண்பகவள்ளியின் மகன் மணிகண்டன்
பார்த்தாலே பரவசம் தருவாயடா!
தட்டி கொடுத்து கட்டிப் பிடித்த முதல் காலம் நீயடா!
என்னையும் மாலுமி ஆக்கிய பெருமை உன்னைத்தானடா சேரும்...!
கைகோர்த்து முகத்தில் புன்னகை வீசி பள்ளி நாட்களில் ஒட்டிப் பிறந்த ரெட்டை குழந்தைகளைப் போல வளம் வந்தோமடா..!
புள்ளி மானைப்போல துள்ளி விளையாடிய பள்ளி நாட்கள் நாம் வாழ்கையை வாழ்ந்த நாட்களடா!
நாம் பொறாமைப் படாமல் பிறரை பொறாமைப்பட வைத்தொமடா நம் நட்பை பார்த்து...!
மழைக்காலத்தில் நீ தந்த சாக்கு'பை குடையில் நான் நனைந்து சென்றேனடா உன் நட்பெனும் மழையில்!
நீ பாதி கடித்துத்தந்த கடலை மிட்டாய் இன்னும் என் நெஞ்சில் நிறைந்து இனிப்பான நினைவுகளாக இனித்துக்கொண்டே இருக்குதடா!
மதம் மொழி இனம் நிறம் - வேறுபாடில்லா நட்பை நீ சொல்லித் தந்தாயடா!
மொட்டுகளாய் இருந்தபொழுதே மொத்தமும் தந்தாயடா பாசத்தை முழுதும் சுவாசமாக...!
கள்ளமில்லா உள்ளம் ஒன்று உண்டென்றால் அது உன் உள்ளம் மட்டும்தானடா!
எதிர் பாராமல் உதவி செய்த உன் இன்பமுகத்தை என் அகக்கண்கள் இன்னும் மறக்கவில்லையடா!
தங்கத்தட்டில் உண்டாலும் தகரத்தட்டில் உன்னோடு உண்டதே உணவாக இருந்ததடா!
பகிர்ந்துன்னுதலை பார்த்ததே உன்னிடம்தான்...கற்றதும் உன்னிடம்தான்!
தூக்கிவிட்ட நாட்களை விட நீ என்னை உயர்த்தி விட்ட நாட்களே அதிகமடா!
நீயிருந்த நேரமெல்லாம் நான் இறக்கவே நேரிட்டது உன் நட்பில்...!
உலகம் மறந்து உவகையில் நானிருந்த நாட்கள்...உன்னோடுதானடா!
உன்னோடு சிரித்த நாட்கள்...உள்ளத்தோடு நீ சேர்த்த நினைவுகள்!
நீ உடைத்துத்தந்த பல்பத்தில் நான் அன்றே எழுதினேனடா நீ தான் என் நண்பன் என்று!
என்னுயிரில் உன் நினைவுகளை சேர்த்தே உயிரோடு வாழ்கிறேனடா!
என் நண்பன் நீயடா!
- செண்பகவள்ளியின் மகன் மணிகண்டன்
No comments:
Post a Comment